குறள்: 410விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.

Learning's irradiating grace who gain,Others excel, as men the bestial train

மு.வரதராசன் உரை

அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

சாலமன் பாப்பையா உரை

விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.

கலைஞர் உரை

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு

Explanation

As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works

Kural Info

குறள் எண்:410
Category:பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
இயல்:அரசியல்