குறள்: 1072நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத்து அவலம் இலர்.

Than those of grateful heart the base must luckier be,Their minds from every anxious thought are free

மு.வரதராசன் உரை

நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

சாலமன் பாப்பையா உரை

நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.

கலைஞர் உரை

எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!

Explanation

The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good)

Kural Info

குறள் எண்:1072
Category:பொருட்பால்
அதிகாரம்:கயமை
இயல்:குடியியல்