மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1071மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில்.
குறள்: 1072நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத்து அவலம் இலர்.
குறள்: 1073தேவர் அனையர் கயவர் அவருந்தாம்மேவன செய்தொழுக லான்.
குறள்: 1074அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரன்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
குறள்: 1075அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
குறள்: 1076அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டமறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
குறள்: 1077ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்கூன்கையர் அல்லா தவர்க்கு.
குறள்: 1078சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.
குறள்: 1079உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ்.
குறள்: 1080எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்விற்றற்கு உரியர் விரைந்து.