குறள்: 1074அகப்பட்டி ஆவாரைக் காணின் அவர஧ன்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

When base men those behold of conduct vile,They straight surpass them, and exulting smile

மு.வரதராசன் உரை

கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

சாலமன் பாப்பையா உரை

தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.

கலைஞர் உரை

பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்

Explanation

The base feels proud when he sees persons whose acts meaner than his own

Kural Info

குறள் எண்:1074
Category:பொருட்பால்
அதிகாரம்:கயமை
இயல்:குடியியல்