குறள்: 1074அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரன்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
When base men those behold of conduct vile,They straight surpass them, and exulting smile
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.
தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்
The base feels proud when he sees persons whose acts meaner than his own
| குறள் எண்: | 1074 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | கயமை |
| இயல்: | குடியியல் |