குறள்: 1078சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.

The good to those will profit yield fair words who use;The base, like sugar-cane, will profit those who bruise

மு.வரதராசன் உரை

அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

சாலமன் பாப்பையா உரை

இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.

கலைஞர் உரை

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்

Explanation

The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death

Kural Info

குறள் எண்:1078
Category:பொருட்பால்
அதிகாரம்:கயமை
இயல்:குடியியல்