குறள்: 1079உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ்.

If neighbours clothed and fed he see, the baseIs mighty man some hidden fault to trace

மு.வரதராசன் உரை

கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.

கலைஞர் உரை

ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்

Explanation

The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food

Kural Info

குறள் எண்:1079
Category:பொருட்பால்
அதிகாரம்:கயமை
இயல்:குடியியல்