குறள்: 1080எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்விற்றற்கு உரியர் விரைந்து.

For what is base man fit, if griefs assail?Himself to offer, there and then, for sale

மு.வரதராசன் உரை

கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?

கலைஞர் உரை

ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்

Explanation

The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?

Kural Info

குறள் எண்:1080
Category:பொருட்பால்
அதிகாரம்:கயமை
இயல்:குடியியல்