குறள்: 418கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.

Where teaching hath not oped the learner's ear,The man may listen, but he scarce can hear

மு.வரதராசன் உரை

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

சாலமன் பாப்பையா உரை

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

கலைஞர் உரை

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்

Explanation

The ear which has not been bored by instruction, although it hears, is deaf

Kural Info

குறள் எண்:418
Category:பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
இயல்:அரசியல்