மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 411செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.
குறள்: 412செவுக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்.
குறள்: 413செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
குறள்: 414கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை.
குறள்: 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
குறள்: 416எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்.
குறள்: 417பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.
குறள்: 418கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.
குறள்: 419நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராதல் அரிது.
குறள்: 420செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என்?