குறள்: 827சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான்.

To pliant speech from hostile lips give thou no ear;'Tis pliant bow that show the deadly peril near

மு.வரதராசன் உரை

வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை

வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.

கலைஞர் உரை

பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது

Explanation

Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes

Kural Info

குறள் எண்:827
Category:பொருட்பால்
அதிகாரம்:கூடா நட்பு
இயல்:நட்பியல்