மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 821சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடைநேரா நிரந்தவர் நட்பு.
குறள்: 822இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.
குறள்: 823பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்ஆகுதல் மாணார்க் கரிது.
குறள்: 824முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரை அஞ்சப் படும்.
குறள்: 825மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற்று அன்று.
குறள்: 826நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்.
குறள்: 827சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான்.
குறள்: 828தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து.
குறள்: 829மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்துநட்பினுள் சாப்புல்லற் பாற்று.
குறள்: 830பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல்.