குறள்: 830பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல்.
When time shall come that foes as friends appear,Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.
பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்
When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former)
| குறள் எண்: | 830 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | கூடா நட்பு |
| இயல்: | நட்பியல் |