குறள்: 557துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு.

As lack of rain to thirsty lands beneath,Is lack of grace in kings to all that breathe

மு.வரதராசன் உரை

மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

சாலமன் பாப்பையா உரை

மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

கலைஞர் உரை

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்

Explanation

As is the world without rain, so live a people whose king is without kindness

Kural Info

குறள் எண்:557
Category:பொருட்பால்
அதிகாரம்:கொடுங்கோன்மை
இயல்:அரசியல்