கொடுங்கோன்மை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 551கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து.

குறள்: 552வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு.

குறள்: 553நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்.

குறள்: 554கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு.

குறள்: 555அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை

குறள்: 556மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி.

குறள்: 557துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு.

குறள்: 558இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின்.

குறள்: 559முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்.

குறள்: 560ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்.