குறள்: 558இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின்.

To poverty it adds a sharper sting,To live beneath the sway of unjust king

மு.வரதராசன் உரை

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

கலைஞர் உரை

வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது

Explanation

Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice

Kural Info

குறள் எண்:558
Category:பொருட்பால்
அதிகாரம்:கொடுங்கோன்மை
இயல்:அரசியல்