குறள்: 706அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம்.

As forms around in crystal mirrored clear we find,The face will show what's throbbing in the mind

மு.வரதராசன் உரை

தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

சாலமன் பாப்பையா உரை

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

கலைஞர் உரை

கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்

Explanation

As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind

Kural Info

குறள் எண்:706
Category:பொருட்பால்
அதிகாரம்:குறிப்பறிதல்
இயல்:அமைச்சியல்