குறள்: 708முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின்.

To see the face is quite enough, in presence brought,When men can look within and know the lurking thought

மு.வரதராசன் உரை

உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

சாலமன் பாப்பையா உரை

தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.

கலைஞர் உரை

அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது

Explanation

If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face

Kural Info

குறள் எண்:708
Category:பொருட்பால்
அதிகாரம்:குறிப்பறிதல்
இயல்:அமைச்சியல்