குறள்: 956சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகுலம்பற்றி வாழ்தும் என் பார்.

Whose minds are set to live as fits their sire's unspotted fame,Stooping to low deceit, commit no deeds that gender shame

மு.வரதராசன் உரை

மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.

கலைஞர் உரை

மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்

Explanation

Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto

Kural Info

குறள் எண்:956
Category:பொருட்பால்
அதிகாரம்:குடிமை
இயல்:குடியியல்