மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 951இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு.
குறள்: 952ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.
குறள்: 953நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.
குறள்: 954அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர்.
குறள்: 955வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பில் தலைப்பிரிதல் இன்று.
குறள்: 956சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகுலம்பற்றி வாழ்தும் என் பார்.
குறள்: 957குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதக்கண் மறுப்போல் உயர்ந்து.
குறள்: 958நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின்கண் ஐயப் படும்.
குறள்: 959நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
குறள்: 960நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு.