குறள்: 957குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து.

The faults of men of noble race are seen by every eye,As spots on her bright orb that walks sublime the evening sky

மு.வரதராசன் உரை

உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.

கலைஞர் உரை

பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்

Explanation

As spots on her bright orb that walks sublime the evening sky

Kural Info

குறள் எண்:957
Category:பொருட்பால்
அதிகாரம்:குடிமை
இயல்:குடியியல்