குறள்: 960நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு.

Who seek for good the grace of virtuous shame must know;Who seek for noble name to all must reverence show

மு.வரதராசன் உரை

ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.

கலைஞர் உரை

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்

Explanation

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all

Kural Info

குறள் எண்:960
Category:பொருட்பால்
அதிகாரம்:குடிமை
இயல்:குடியியல்