குறள்: 433தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்.

Though small as millet-seed the fault men deem;As palm tree vast to those who fear disgrace 'twill seem

மு.வரதராசன் உரை

பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை

பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.

கலைஞர் உரை

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்

Explanation

Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree

Kural Info

குறள் எண்:433
Category:பொருட்பால்
அதிகாரம்:குற்றங்கடிதல்
இயல்:அரசியல்