குற்றங்கடிதல்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 431செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து.

குறள்: 432இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு.

குறள்: 433தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்.

குறள்: 434குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் த்ரூஉம் பகை.

குறள்: 435வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்.

குறள்: 436தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு?

குறள்: 437செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்.

குறள்: 438பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதொன் றன்று.

குறள்: 439வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினை.

குறள்: 440காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்.