குறள்: 434குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் த்ரூஉம் பகை.

Freedom from faults is wealth; watch heedfully'Gainst these, for fault is fatal enmity

மு.வரதராசன் உரை

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்

Explanation

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy

Kural Info

குறள் எண்:434
Category:பொருட்பால்
அதிகாரம்:குற்றங்கடிதல்
இயல்:அரசியல்