குறள்: 962சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர்.

Who seek with glory to combine honour's untarnished fame,Do no inglorious deeds, though men accord them glory's name

மு.வரதராசன் உரை

புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.

கலைஞர் உரை

புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்

Explanation

Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame

Kural Info

குறள் எண்:962
Category:பொருட்பால்
அதிகாரம்:மானம்
இயல்:குடியியல்