மானம்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 961இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல்.

குறள்: 962சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர்.

குறள்: 963பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு.

குறள்: 964தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை.

குறள்: 965குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்.

குறள்: 966புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்றுஇகழ்வார்பின் சென்று நிலை.

குறள்: 967ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.

குறள்: 968மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடழிய வந்த இடத்து.

குறள்: 969மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின்.

குறள்: 970இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழுது ஏத்தும் உலகு.