குறள்: 964தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை.

Like hairs from off the head that fall to earth,When fall'n from high estate are men of noble birth

மு.வரதராசன் உரை

மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

கலைஞர் உரை

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்

Explanation

They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head

Kural Info

குறள் எண்:964
Category:பொருட்பால்
அதிகாரம்:மானம்
இயல்:குடியியல்