குறள்: 967ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.

Better 'twere said, 'He's perished!' than to gainThe means to live, following in foeman's train

மு.வரதராசன் உரை

மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை

இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.

கலைஞர் உரை

தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்

Explanation

It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him

Kural Info

குறள் எண்:967
Category:பொருட்பால்
அதிகாரம்:மானம்
இயல்:குடியியல்