குறள்: 970இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழுது ஏத்தும் உலகு.

Who, when dishonour comes, refuse to live, their honoured memoryWill live in worship and applause of all the world for aye

மு.வரதராசன் உரை

தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை

தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.

கலைஞர் உரை

மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்

Explanation

The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity

Kural Info

குறள் எண்:970
Category:பொருட்பால்
அதிகாரம்:மானம்
இயல்:குடியியல்