குறள்: 942மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்.

No need of medicine to heal your body's pain,If, what you ate before digested well, you eat again

மு.வரதராசன் உரை

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

கலைஞர் உரை

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை

Explanation

No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested

Kural Info

குறள் எண்:942
Category:பொருட்பால்
அதிகாரம்:மருந்து
இயல்:நட்பியல்