குறள்: 943அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

Who has a body gained may long the gift retain,If, food digested well, in measure due he eat again

மு.வரதராசன் உரை

முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை

முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.

கலைஞர் உரை

உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்

Explanation

If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul

Kural Info

குறள் எண்:943
Category:பொருட்பால்
அதிகாரம்:மருந்து
இயல்:நட்பியல்