குறள்: 944அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து.

Knowing the food digested well, when hunger prompteth thee,With constant care, the viands choose that well agree

மு.வரதராசன் உரை

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.

கலைஞர் உரை

உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்

Explanation

(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you)

Kural Info

குறள் எண்:944
Category:பொருட்பால்
அதிகாரம்:மருந்து
இயல்:நட்பியல்