குறள்: 945மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

With self-denial take the well-selected meal;So shall thy frame no sudden sickness feel

மு.வரதராசன் உரை

மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.

கலைஞர் உரை

உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை

Explanation

There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable

Kural Info

குறள் எண்:945
Category:பொருட்பால்
அதிகாரம்:மருந்து
இயல்:நட்பியல்