குறள்: 946இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்.

On modest temperance as pleasures pure,So pain attends the greedy epicure

மு.வரதராசன் உரை

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.

சாலமன் பாப்பையா உரை

குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

கலைஞர் உரை

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை

Explanation

As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously

Kural Info

குறள் எண்:946
Category:பொருட்பால்
அதிகாரம்:மருந்து
இயல்:நட்பியல்