குறள்: 950உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுஅப்பால் நாற் கூற்றே மருந்து.

For patient, leech, and remedies, and him who waits by patient's side,The art of medicine must fourfold code of laws provide

மு.வரதராசன் உரை

நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

சாலமன் பாப்பையா உரை

நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

கலைஞர் உரை

நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது

Explanation

Medical science consists of four parts, viz, patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions

Kural Info

குறள் எண்:950
Category:பொருட்பால்
அதிகாரம்:மருந்து
இயல்:நட்பியல்