குறள்: 601குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும்.

Of household dignity the lustre beaming bright,Flickers and dies when sluggish foulness dims its light

மு.வரதராசன் உரை

ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

கலைஞர் உரை

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்

Explanation

By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished

Kural Info

குறள் எண்:601
Category:பொருட்பால்
அதிகாரம்:மடி இன்மை
இயல்:அரசியல்