மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 601குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும்.
குறள்: 602மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர்.
குறள்: 603மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து.
குறள்: 604குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு.
குறள்: 605நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்.
குறள்: 606படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது.
குறள்: 607இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர்.
குறள்: 608மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும்.
குறள்: 609குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும்.
குறள்: 610மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு.