குறள்: 603மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து.

Who fosters indolence within his breast, the silly elf!The house from which he springs shall perish ere himself

மு.வரதராசன் உரை

அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை

விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

கலைஞர் உரை

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்

Explanation

The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead

Kural Info

குறள் எண்:603
Category:பொருட்பால்
அதிகாரம்:மடி இன்மை
இயல்:அரசியல்