குறள்: 604குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு.

His family decays, and faults unheeded thrive,Who, sunk in sloth, for noble objects doth not strive

மு.வரதராசன் உரை

சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

சாலமன் பாப்பையா உரை

சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

கலைஞர் உரை

சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்

Explanation

Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions

Kural Info

குறள் எண்:604
Category:பொருட்பால்
அதிகாரம்:மடி இன்மை
இயல்:அரசியல்