குறள்: 607இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர்.

Who hug their sloth, nor noble works attempt,Shall bear reproofs and words of just contempt

மு.வரதராசன் உரை

சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை

சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.

கலைஞர் உரை

முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்

Explanation

Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject

Kural Info

குறள் எண்:607
Category:பொருட்பால்
அதிகாரம்:மடி இன்மை
இயல்:அரசியல்