குறள்: 608மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும்.

If sloth a dwelling find mid noble family,Bondsmen to them that hate them shall they be

மு.வரதராசன் உரை

சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை

குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

கலைஞர் உரை

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்

Explanation

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies

Kural Info

குறள் எண்:608
Category:பொருட்பால்
அதிகாரம்:மடி இன்மை
இயல்:அரசியல்