குறள்: 1042இன்மை எனவொரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும்.
Malefactor matchless! poverty destroysThis world's and the next world's joys
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது
When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)
| குறள் எண்: | 1042 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | நல்குரவு |
| இயல்: | குடியியல் |