மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1041இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.
குறள்: 1042இன்மை எனவொரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும்.
குறள்: 1043தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குரவு என்னும் நசை.
குறள்: 1044இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொற்பிறக்கும் சோர்வு தரும்.
குறள்: 1045நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும்.
குறள்: 1046நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.
குறள்: 1047அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.
குறள்: 1048இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு.
குறள்: 1049நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்யாதொன்றும் கண்பாடு அரிது.
குறள்: 1050துப்புர வில்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்று.