குறள்: 1043தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குரவு என்னும் நசை.
Importunate desire, which poverty men name,Destroys both old descent and goodly fame
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.
இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்
Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech
| குறள் எண்: | 1043 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | நல்குரவு |
| இயல்: | குடியியல் |