குறள்: 1044இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொற்பிறக்கும் சோர்வு தரும்.

From penury will spring, 'mid even those of noble race,Oblivion that gives birth to words that bring disgrace

மு.வரதராசன் உரை

வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

கலைஞர் உரை

இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்

Explanation

Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words

Kural Info

குறள் எண்:1044
Category:பொருட்பால்
அதிகாரம்:நல்குரவு
இயல்:குடியியல்