குறள்: 1045நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும்.

From poverty, that grievous woe,Attendant sorrows plenteous grow

மு.வரதராசன் உரை

வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

சாலமன் பாப்பையா உரை

இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.

கலைஞர் உரை

வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்

Explanation

The misery of poverty brings in its train many (more) miseries

Kural Info

குறள் எண்:1045
Category:பொருட்பால்
அதிகாரம்:நல்குரவு
இயல்:குடியியல்