குறள்: 1047அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.

From indigence devoid of virtue's grace,The mother e'en that bare, estranged, will turn her face

மு.வரதராசன் உரை

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை

நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.

கலைஞர் உரை

வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்

Explanation

He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother

Kural Info

குறள் எண்:1047
Category:பொருட்பால்
அதிகாரம்:நல்குரவு
இயல்:குடியியல்