குறள்: 1050துப்புர வில்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்று.

Unless the destitute will utterly themselves deny,They cause their neighbour's salt and vinegar to die

மு.வரதராசன் உரை

நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.

கலைஞர் உரை

ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு

Explanation

The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water

Kural Info

குறள் எண்:1050
Category:பொருட்பால்
அதிகாரம்:நல்குரவு
இயல்:குடியியல்