குறள்: 594ஊக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.

The man of energy of soul inflexible,Good fortune seeks him out and comes a friend to dwell

மு.வரதராசன் உரை

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

சாலமன் பாப்பையா உரை

தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.

கலைஞர் உரை

உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்

Explanation

Wealth will find its own way to the man of unfailing energy

Kural Info

குறள் எண்:594
Category:பொருட்பால்
அதிகாரம்:ஊக்கம் உடைமை
இயல்:அரசியல்