மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 591உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்உடையது உடையரோ மற்று.
குறள்: 592உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.
குறள்: 593ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார்.
குறள்: 594ஊக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.
குறள்: 595வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு.
குறள்: 596உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
குறள்: 597சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு.
குறள்: 598உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.
குறள்: 599பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானைவ்ருஉம் புலிதாக் குறின்.
குறள்: 600உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்மரம்மக்க ளாதலே வேறு.